Reviews Archives - Naseema Razak
163
archive,category,category-reviews,category-163,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Reviews / 17.01.2024

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல். இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார். 1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன்...

Reviews / 22.09.2023

எழுத்தாளர் : கோகிலா பாபு வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும் இவை விளக்கும் வாழ்வியல் உண்மைகள் பெரியது. படிப்பவரின் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற புரிதலை உண்டாக்குவது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையும் அதைத்தான் சொல்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமியின் கதைகளையும், மேலும் சில பழைய கதைகளையும் சேர்த்து தொகுத்துள்ளதாகச் சொல்கிறார் நூலாசிரியர். ஐம்பது கதைகளில் ஐந்தைத் தவிர மற்ற அனைத்தும் எனக்குப் புதியவை. ஒன்றிரண்டு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேவாமிர்தம், வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய் என, எனக்குப் பழகிய வார்த்தைகளும் கதைகளில்...

Reviews / 03.02.2023

இன்றைய பதின்பருவக் குழந்தைகள் பிரச்சனைகள் சூழ்ந்த உலகில் மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். 'நீல் & ஹீல்' (Kneal & Heal) முதலில் செவிமடுத்து பிரச்சனையைக் கேட்டு உள்வாங்கி , அவற்றை(ஹீலிங்) குணப்படுத்துதல். நூலாசிரியர் உளவியல், தியானம், ஹீலர் என குழந்தைகள் உலகில் ஒரு ஆலோசகராக அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கண்டு கேட்ட உணர்ந்த சம்பவங்களே இந்தத் 'தளிர்' . இக்கதையின் நாயகி பர்வீன், கணவர் சலீம் இரண்டு பெண் குழந்தைகளுடன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். பர்வீனது புலம்பெயர் வாழ்வின் அனுபவங்கள், சிறு சிறு அத்தியாயங்களாக நம் கண்முன் விரிகிறது. மணற் புயலில் ஆரம்பிக்கும் நாவல் , சிறப்பான அனுபவங்களுடன் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு உளவியல் மையம் சென்று, அங்கு வந்திருப்பவருக்கு ஆறுதல் கூறி கவுன்சிலிங் செய்து மீண்டும் இல்லம் திரும்பி குடும்பப் பணிகளை கவனிக்கும்...

Reviews / 23.12.2022

சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம். நன்றி Pa Raghavan சார். பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே யாரும் சந்தேகப்படவில்லை. வெளியாகி முடிந்ததும் வாசகர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். (இன்றைய எனது எடையில் சுமார் பத்து கிலோ அப்போது ஏறியதாக இருக்கும்.) அது ஒரு சிறிய சூட்சுமம்தான். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்குக் கதை சொல்லும்போது குழந்தைத்தனமாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுதான் பணி. அதைச் சரியாகச் செய்தால் போதும். வென்றுவிடும். மெல்லினத்துக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் ஒன்றிரண்டு நடந்தன. பெரிய அளவில் எடுபடவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது...

Reviews / 12.12.2022

    நன்றி Mani Meenakshi Sundaram . நூலின் பெயர் : மராம்பு நூலாசிரியர் : நசீமா ரசாக் முதல் பதிப்பு : ஆகஸ்டு'2022 பக்கங்களின் எண்ணிக்கை : 102 விலை: ரூபாய்.130 வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை - 600042 சங்ககால நூல்களில் பாலை நில மலரெனக் குறிப்பிடப்படும் 'மராம்பு' என்னும் மலரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். இத்தலைப்பு தமிழகத்தின் பாலை நிலங்களில் காணப்படும் மராம்பு மலரை,தாய்நாட்டை விட்டு வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடன் ஒப்பீடு செய்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, துபாயில் வசிக்கும் எழுத்தாளர் நசீமா ரசாக் கின் இரண்டாவது குறுநாவல் இந்நூலாகும். இந்நூல் எளிய முறையில் கதை நகர்த்தும் குறுநாவலாக இருந்தாலும், நான்கு பெண்களைச் சுற்றிச் சுழலும் சிறுநூலாக இருந்தாலும் ,தம் குடும்ப வறுமை போக்க அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் பெண்களின் துயர வாழ்வை மிகச் சிறப்பாகவே முன்னிறுத்துகிறது. அன்றிலிருந்து இன்றுவரை நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட மாட்டோமா,நம்...

Reviews / 12.12.2022

#மணல்_பூத்த_காடு முஹம்மது யூசுப் நண்பர் யூசுப் அவர்களின் எழுத்து எனக்கு புதியது இல்லை என்றாலும் அவர் எழுதிய முதல் நாவல் படிக்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிட்டியது. இது நாவலா? பல கதைகளின் தொடரா? பயண நூலா? வரலாற்றுப் புத்தகமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் "ஆம்" என்ற பதிலை வாசகன் தர எழுத்தாளர் எடுத்த புதிய வடிவமைப்பு இந்த நாவல். ஒருவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்தால் போதும் என்ற நபிகள் நாயகத்தின் மொழியை முன்னுரையில் வைத்து நாவல் தொடர்கிறது. வேர் பதியாத சொந்த மண்ணிலிருந்து உருவி வளைகுடா சென்று வேர் பிடித்தும் பிடிக்காமல் வாழும் பலரோடு பிரதிபலிப்பாக "அனீஸ்" என்ற கதாபாத்திரம் மூலம் நாவல் நகர்கின்றது. நாவல் முழுக்க ரியாத்தில் இருந்து பல மைல்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வது சுவாரசியத்திற்குச் சிறிது தடையாக இருந்தாலும் அதனூடே கிடைக்கும் அனுபவங்கள்...

Reviews / 08.12.2022

#நடைவண்டியில் ஏறி கவிதை படிக்க ஆர்வமாய் பயணித்தேன். அழகான கவிதைகள் ஆழமான சிந்தனைகள் என்ற பக்குவமான எழுத்துக்கள். 25 வருடத்திற்கு முன் எழுதிய அந்த இளைஞனை யோசித்து வியந்தேன். " சுதந்திரம் " மூலம் தந்த தாகம், " சதுரங்கம் " ஆட்டத்தை நடத்தி இறுதியாக எதிரியுடன் கை குலுக்குவதே சுதந்திரம் என்று முடிக்கும் மனம், கடிகார முட்கள் சொல்லும் கம்பீரம், வீரம், ஒரே பாதையில் பயணித்தும் ஒன்றை ஒன்று தடுத்துக் கொள்ளாத நாகரீகம், "நவீன நாடுகடத்தல்", தீ என்று பெண் உணர்வுகளையும் சேர்த்து சமூக சிந்தனைகளை எழுத்துக்களால் செதுக்கி இருக்கின்றார்.இந்த நூலை Brindha Sarathy #பிருந்தா சாரதி அவர்களிடம் இருந்து பரிசாக பெற்றது கூடுதல் சிறப்பு....

Reviews / 08.12.2022

#திருக்கார்த்தியல் நாம் அன்றாடம் வாழ்க்கையில் எங்கோ ஒரு பஸ் ஸ்டாப்பில் சேலை விலகிய அலங்கோலமான பெண்ணை கடந்து இருப்போம் , கிராமங்களில் இருக்கும் மாணவ விடுதிகளைக் கடந்து இருப்போம் , பம்ப் செட்டின் சின்ன அறையை வீடாக கொண்ட குடுபங்களைக் கடந்து இருப்போம் . இப்படி இயல்பாகத் தோன்றும் இந்த மக்களின் வலிகளை ஒவ்வொரு கதைகளில் வரும் கதாபாத்திரம் மூலம் , வாசகர்கள் கடந்து செல்ல முடியாமல் ,அந்த மக்களை கவனத்திற்குக் கொண்டுவந்து இருக்கிறார் ராம். பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை தெரு முழுக்க சமைக்க , மாணவ விடுதியில் தங்கி படிக்கும் செந்தமிழுக்கு, வெறும் வாசனையை மட்டும் தந்த வீதி மக்களின் மீது வந்த கோபம் . காய்ந்துபோன, கெட்டுப்போன அல்வாவை சுவைத்த அவன் நாக்கு, இயலாமையை , ஏமாற்றத்தை அறைந்து சொல்லுகின்றது . அம்மாவும், அப்பாவும்...

Reviews / 08.12.2022

"ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் கவிதாவிடம் ஒரு கேள்வி " அடுத்த புத்தகம் எப்ப வரும்?...

Reviews / 01.12.2022

தங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று தொழிலாளர்களாக வேலை செய்யும் ஐந்து பெண்களின் கதை. ஐந்து பெண்களும் வேறு வேறு மாநிலங்களில் இருந்து துபாய் சென்று ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வீட்டு வேலை, கால் டாக்ஸி ஓட்டுனர், அழகுக்கலை நிபுணர், அலுவலக உதவியாளர் என்று நான்கு பெண்களுக்கும் ஒவ்வொரு வேலைகள். போலி ஏஜெண்டால் ஏமாற்றமப்பட்ட வள்ளி அந்த அறைக்கு வருகிறாள். அந்த அறையில் வள்ளி மட்டுமே தமிழ்ப் பெண். மொழிகள் வேறாக இருந்தாலும் உணர்வுகளும் பிரச்சனைகளும் மனிதர்களுக்கு ஒரே வகையானவைகள்தான். இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்வு முறை, பணிச் சூழல், போராட்டங்கள், வருங்காலக் கனவுகள், இவைகளுக்கு நடுவில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள், அந்த சந்தோசங்களை அவர்கள் சேர்ந்து கொண்டாடும் விதம் எல்லாம் நெகிழ்ச்சியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தந்தப் பெண்களின் பிரச்னைகளுக்கேற்ப யதார்த்தமான முடிவுகள். கற்பனைக்...