துபாய் என் புகுந்த வீடு. இந்த வீட்டுக்கு நான் ஒரு நல்ல மருமகள். இங்கு வந்த காலம் முதல் நான் பார்க்கும்-என்னை பாதிக்கும் ஒவ்வொன்றையும் மெட்ராஸ் பேப்பரில் அவ்வப்போது எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் படித்துப் பார்க்கும்போதுதான் ஒரு நிலப்பரப்பு நம்மையறியாமல் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பது புரிகிறது.
என்னுடைய துபாய் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. இந்த தேசத்தை இது உங்களுக்குச் சரியான விதத்தில் அறிமுகப்படுத்தும் என்று நினைக்கிறேன். இன்னொரு தொகுப்பு விரைவில் வரும். இது ஒரு சிறிய தொடக்கம் மட்டுமே. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதினால் மகிழ்வேன்.
கிண்டிலில் புத்தகம் உள்ள பக்கத்தின் லிங்க், கீழே கமெண்ட்ஸில் உள்ளது.
Discover more from Naseema Razak
Subscribe to get the latest posts sent to your email.






