Skip to content
Blog

செயல்களை ரகசியமாக்குவோம்

April 2, 20250 second read

நாம் வாழும் இந்த டிஜிட்டல் யுகத்தில், தகவல் பகிர்வு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அனைத்தையும் பகிர்வது அவசியமா என்று நாம் யோசிப்பதில்லை. ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போதே அதைப் பெரிதாகப் பேசிவிடுகிறோம்.
உளவியல் ரீதியாக இலக்குகளை, கனவுகளை நாம் பகிரும்போது, நமது மூளை அதை ஓரளவு சாதித்ததாக எடுத்துக் கொள்கிறது. இது நம் உந்துதலைக் குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2009இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்கள் இலக்குகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், அதை அடைவதற்கான முயற்சியில் ஆர்வம் செலுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது.

அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். திருவள்ளுவர்கூட இதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு நடந்தாலே பாதிக் கிணற்றைத் தாண்டி விடலாம்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

அதாவது, ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை வெளிப்படுத்தாமலிருப்பதே நல்லது. அதுதான் செயலாற்றும் உறுதியைக் கொடுக்கும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அந்தச் செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

லைக்குகளுக்காகவும் அப்போதைய மகிழ்ச்சிக்காகவும் இலக்குகளை வெளியே சொல்லும்போது, நாமே நம் காரியங்களைச் செய்து முடிப்பதற்குத் தடையாகிப் போகிறோம்.

அதுமட்டுமன்றி சில உளவியல் தாக்கங்களும் ஏற்படுகின்ற. 2018இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தொடர்ந்து சமூக ஊடகங்களில் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து வரும் மக்களிடம் பதற்றம், மன அழுத்தம், பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பேச இடம் இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. சமூக ஊடகங்களில் உங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் பகிர்வதைவிட உங்கள் வெற்றியைப் பகிர்ந்து மகிழுங்கள். அதுவரை சத்தமில்லாமல் உங்கள் செயலில் கவனம் செலுத்துங்கள்.

சுலபமாகத் தெரியும் எதுவும் எளிதில் செய்யக் கூடியதாக இருப்பதில்லை.
பத்து வழிகளை விழிப்புணர்வோடு முயற்சி செய்து பாருங்கள்.

1. ‘மெளன விதி’யைப் பின்பற்றுங்கள். அதாவது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன முன்னேற்றங்களையும் வெளியே சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வெற்றி கிடைக்கும் போது மட்டுமே அதைக் கொண்டாடுங்கள்; பகிருங்கள்.

2. நம்பகமான ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது குடும்பத்தாராகவோ நெருங்கிய நண்பர்களாகவோ இருக்கட்டும். அவர்களிடம் மட்டுமே பகிர்தல் இருக்கட்டும்.

3. ரகசிய நாள்குறிப்பை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சின்ன சின்ன செயல்களையும் பதிவு செய்து வருவது, நீங்கள் வெகு தூரம் பயணிக்க உதவும். அதுமட்டுமன்றி வெற்றி பெற்ற பின் எழுதியவற்றைப் பார்க்கும் போது , உங்கள் உழைப்பு, திட்டம் பற்றி ஒரு புரிதல் ஏற்படும்.

4. சலசலப்பில்லாமல் இருப்பது உங்கள் வெற்றிக்கு மிக அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

5. சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல மற்றவர்களிடமும் தேவைக்கு அதிகமாகப் பகிரும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களது சிறிய வட்டத்தில் மட்டுமே அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6. தேவையின் அடிப்படையில் தகவல்களை அவசியமானவர்களுக்குச் சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

7. சிலர் நமக்கு முக்கியமான ஆனால் அவர்களுக்குத் தேவையற்ற விஷயங்களைப் பேசிப் பேசி பெற்றுக் கொள்வார்கள். அவர்களிடம் திட்டங்களைப் பற்றிப் பேசாதீர்கள்.

8. உணர்வுகளைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். அதீத உற்சாகம் ஆர்வக்கோளாறாக மாறி உங்கள் செயல்களைப் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9. திட்டங்களைப் பகிராமல் ஒரு செயலைச் செய்யும் போது, தவறு ஏற்பட்டாலும் அதிலிருந்து கற்று மீண்டும் செயலில் இறங்கும் மனம் நமக்கு வாய்க்கும்.

10. ஒரு நாள் மட்டும் பிரபலமாக இருப்பது முக்கியமல்ல, வாழ்நாள் சாதனையாளராவது இருப்பது உங்கள் இலக்காக இருக்கட்டும்.

எனவே நமது கனவுகளை, செயல்களை, திட்டங்களை அமைதியாகப் பாதுகாத்து, விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியே உங்கள் வந்து சேரும்!


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

6 Comments

Comments (6)

  1. மிகச் சரியாக எனக்கு பொருந்துகிறது என்னுடைய திட்டங்களை செயல்படுத்த நீங்கள் மேல் கூறியுள்ளது போல நான் செயல் பட வேண்டும்

    நன்றி

  2. பா.ராகவன் சார் தன் வாட்சப் சேனலில்உங்கள் சேனலைப் பற்றிக் கூறிய பொழுது ஒரு ஆர்வத்தால் உங்களை பின் தொடர்ந்தேன்.
    ‌ இளங்கன்று பயமறியாது என்பார்கள் இளங்கன்று துள்ளி விளையாடுவதையும் பார்த்து மகிழ்வுற்றேன்
    உங்களின் ‘ கொழு கொழு ‘ தொடரை வெகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.என் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலை தெரிவித்தால் அவ்வப்போழுது கருத்து சொல்ல காத்திருக்கிறேன். வாழ்த்துகள்

  3. உங்களுடைய படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல் தோழர். உங்கள் channel அறிமுகம் செய்ததும் தொடர்ந்து தங்கள் கட்டுரைகளை வாசித்து வருகிறேன். இந்த காலக்கட்டத்திற்கு தேவையானதை சிறப்பாக படைத்து வருகிறீர்கள். பேரன்புகளும் நன்றிகளும்❤️. சகப்பெண்ணாக தங்களைக் குறித்து பெருமிதம் அடைகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  4. Dear Madam
    I slightly differ with the results of 2009.
    In general ,
    In our work culture the first thing is target date and task .
    This follows strictly with realistic timelines
    In addition the roles and responsibilities of every stakeholders to be very precise
    Mike stone achievements are help us to test our strategy and strength of our team and contribution by every team member.
    At the end of project successful completion
    As a team we need to think again how we can reduce our timeline
    Alternative strategies
    Risk assessment and mitigation plans
    Success and failure of current team member contribution
    The above mentioned method we can change as per individual competency level .
    Focusing on goals and consistency in our work will keep our success in our hands .
    Please for your kind suggestions.
    Thanks & best regards
    KarunagaranL

  5. Hi Mr. Karunagaran, Yes in work space we have goals as a team. We do have to discuss and retrospect to meet the end result, I agree with your point of view regarding this. But in personal Plans I prefer to be shout out with the result. Thank You for sharing your view.

  6. First CLASS கட்டுரை மேடம்…..தினசரி வாழ்க்கையில் பின்பற்ற ஒவ்வொருவரும் முயல வேண்டும்

Comments are closed.

Back To Top

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading