Blog Archives - Page 4 of 4 - Naseema Razak
1
archive,paged,category,category-blog,category-1,paged-4,category-paged-4,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

#தளிர் நாவல் முடித்து, மூச்சு விடும் நேரத்தில், இப்படி ஒரு காரியத்தை ஜின் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஒரு நாவலை முழுதாக முடிக்க நான் பட்ட பாடு என் முதுகுக்கும் , மருத்துவருக்கும் தான் வெளிச்சம். அதற்குள் என் கையை இழுத்துக் கொண்டு கணினியோடு கட்டுவது எல்லாம் அராஜகம் . நாவலை முடித்திருந்த ,கொண்டாட்ட மனநிலையை எப்படி மாற்றியது என்று யான் அறியேன். மனம் எதையோ தேட ஆரம்பித்தது .”எதை நீ தேடுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்று உணர்ந்த தருணம் . தேடலில் மூழ்கி மூச்சு முட்டும் போது, கை தானாகக் கணினியைப் பற்றிக் கொண்டது. அப்படி உருவானது தான் “சூஃபி ஆகும் கலை “. நான் மூழ்கி எடுத்தவற்றை உங்களுக்காக எழுத்துக்களால் கோர்த்து உள்ளேன். வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரும் இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் கிடைத்து...

இன்றைய மெட்ராஸ் பேப்பரில் வெளிவந்த என் கட்டுரை. சவூதி அரேபியாவில், ஜோ பிடனுக்கு கிடைக்காத வரவேற்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கிடைத்துள்ளது. இருநூறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. சீன அரேபிய மாநாடு சிற்பாக நடந்து முடிந்தது. அமெரிக்கா நடக்கவே கூடாது என்று நினைத்தது,நடந்து கொண்டிருக்கிறது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை சொடக்கவும். https://www.madraspaper.com/china-arab-summit/ #மெட்ராஸ்_பேப்பர் ...

என் மாணவர்களோடு நிறையப் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த படம் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த குட்டி வாண்டு பெயர் “காவரில்” என் சென்டரின் கடைக்குட்டி . ஒரு நாள் நான் கதை சொல்லும் போது தானும் சொல்ல வேண்டும், என்று என் அருகில் வந்தான். நான் கதை முடித்த பிறகு, நீ கதை சொல் என்றேன்.என் அருகிலே நின்று கொண்டு இருந்தான், அதுவும் சும்மா இல்லை என் சுண்டி விரலைச் சுரண்டிக் கொண்டே . நான் முடித்த பிறகு கதை சொல்லத் தொடங்கினான்.என்னை அங்கே இருந்து நகர விடாமல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கதைத்தான். அவன் கதைப்பது முடியும் வரை, அந்த பிஞ்சு விரல்களும் அந்த அன்பைச் சொல்லிக் கொண்டு இருந்தது....

எதிர்பாராமல் கிடைக்கும் சிறிய சந்தோஷம் கூட மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிடும். #மெட்ராஸ்_பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக இருந்து, இப்போது உதவி ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்றிருக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பெரும் வாய்ப்பு சந்தோஷத்தை மட்டும் அல்ல மன நிறைவையும்,கொடுக்கிறது. என் பேனாவை இன்னும் இறுகப் பற்றிக் கொள்ள இதை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும்? மெட்ராஸ் பேப்பர் குழுவிற்கு என் நன்றி ...