Home - Naseema Razak
5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-4,page-paged-4,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Madras Paper / 21.09.2023

பாகிஸ்தான் சரித்திரத்தில் இதற்குமுன் நடந்திராத ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. என்னை ஐ.எஸ்.ஐயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் அரசு அதிகாரியிடம் தஞ்சம் கேட்டிருக்கிறார். இதனாலெல்லாம் உலகம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. நம்ப முடியாத அவ்வுண்மைச் சம்பவத்தைப் படிக்க லிங்க் கீழே. https://www.madraspaper.com/hizbulla-mujahidin-isi-warning/ ...

Madras Paper / 06.09.2023

2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும்.  இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.   https://www.madraspaper.com/syria-isis-refugees-camp/  ...

Blog / 05.05.2023

ஆரம்பப் படிப்பு முடிந்ததும் மார்க்ஸ் ட்ரியரிலிருந்து உயர் தரப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவனுக்கு வயது பன்னிரண்டு. சரியாக ஐந்து வருஷ காலம் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான். லத்தீன், ஜெர்மன்,கிரீக்,பிரெஞ்சு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றான். இவனுடைய கவிதா சக்தியும் வளர்ந்து வந்தது. அதே சமயத்தில் இவனுடைய மனமும் பண்பாடு பெற்று வந்தது. தன்னுடைய எதிர்கால வாழ்க்கை இன்னபடி தான் இருக்க வேண்டும் என்பதை இவன் இந்தக் காலத்தில் நிர்ணயம் செய்து கொண்டுவிட்டான் எப்படியென்றால்,கடைசி வருஷப் பரீட்சையின் போது, இவனுடைய வினாப்பத்திரம் ஒன்றில், ' ஓர் இளைஞன் ஏதேனும் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு முந்தி அவன் மனதில் உதிக்கும் எண்ணங்கள் என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை இவன் மிக அழகாக எழுதினான். அதில் பொதிந்துள்ள நுட்பமான,கருத்துக்களைக் கண்டு இவனுடைய ஆசிரியர்கள் பிரமித்துப் போனார்கள்....

Blog / 03.05.2023

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ் ட்விட்டர்வாசிகள் எல்லோருக்கும் தெரியும். சிற்றிதழ்களாலும் பேரிதழ்களாலும் கைவிடப்பட்ட ஓர் இலக்கிய நிராயுதபாணி என்று நண்பரொருவர் சொன்னார். எத்தனை அபத்தம் இது. பேயோனின் எழுத்தை வாசிக்க நேரும் எந்த ஓர் எடிட்டரும் துள்ளிக் குதித்து அள்ளிக்கொள்ளாதிருக்க வாய்ப்பே இல்லை. சுய எள்ளல் போர்வையில் அவரே சொல்லிக்கொண்டாலும் சந்தேகமின்றி,  சமகால, தனித்துவ எழுத்துதான் அவருடையது. சந்தேகமில்லை. பேயோனின் பலம் அவரது அபாரமான நகைச்சுவை உணர்வில் உள்ளது. பலநாள் அலுவலகத்தில் வேலைக்கிடையே அவரது...