Home - Naseema Razak
5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-2,page-paged-2,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Blog / 25.10.2023

சிலருக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் இடம் மாற்றம் தேவை. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது சொகுசாகத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அது தேவையாக இருக்கும். முக்கியமாகப் படைப்புச் சார்ந்த வேலைகளில் இருப்பவர்களிடம் இந்த குணத்தை பார்க்கலாம். மாடமாளிகை இல்லை என்றாலும் ஒரு மாற்றம், ஒரு தனிமை. ஆனால் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் ஃப்ளெமிங் தன் இலக்குக்காக ஜமாய்க்கா என்ற நகரில் ஒரு மாளிகையைக் கட்டினார். நானோ நீங்களோ அதே இலக்குக்குப் பின் சென்றால் அதற்காக ஒரு அறை கட்டுவோமா என்பது சந்தேகம்..ஆனால் ஃப்ளெமிங் அதிர்ஷ்டசாலி. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் கடற்படையின் முக்கிய அதிகாரியாக இருந்த இயன் ஃப்ளெமிங் போர் ஆபரேஷன் பலவற்றில் வேலை செய்துள்ளார். அதில் ஒன்று கோல்டன் ஐ. தான் ஆசையாகக் கட்டிய மாளிகைக்கும் கோல்டன்...

Blog / 16.10.2023

வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடப்பெரிய தகுதியாகப் பொறுமை இருக்க வேண்டும். இதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் சிலர் வாழ்க்கையில் எடுத்த எடுப்பில் வெற்றி கிடைத்துவிடும். கிடைத்த வெற்றியைத் தக்க வைப்பது என்பது வெற்றிபெற உழைப்பதை விடப் பெரிய வேலை. காஜு இஷிகுரோ என்ற ஜப்பான் இளைஞர் தன்னுடைய இருபத்தெட்டாவது வயதில் முதல் நாவலை வெளியிடுகிறார். அந்த நாவலும் வாசகரிடத்தில் கவனம் பெறுகிறது. அடுத்தடுத்து அவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. இவையனைத்தும் பகுதி நேரத்தில் எழுதி முடித்தவை. அவரது இரண்டாவது நாவல் 1983-ஆம் ஆண்டு புக்கர்விருதைப் பெறுகிறது. இரண்டாவது புத்தகத்தில் புக்கர் எல்லாம் சாதாரண வெற்றி இல்லை. இலக்கிய உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் இஷிகுரோவுடைய நேரம் தேவைப்படும் என்று அவர் நினைக்கவில்லை. விருது கிடைத்தவுடன்...

Blog / 13.10.2023

  எண்பத்தி மூன்று வயதாகும் அந்த முதியவருக்காக இன்றும் வாசகன் காத்துக் கொண்டிருக்கிறான். அவர் பிறக்கும் போது தந்தை இழப்பு. தாய் லண்டனில் இருக்கும் வெஸ்டன் நகரின் லோக்கல் செய்தித்தாளில் வாராந்திர பத்தி எழுத்தாளர். இலக்கியம், வரலாறு பாடங்களில் சிறந்து விளங்கிய அந்த இளைஞன் இராணுவம், காவல்துறை, ஆசிரியர் என்று கிடைத்த வேலை எதையும் விடவில்லை. 1963-ஆம் ஆண்டு ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் டிப்ளமோ படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார் என்று பலர் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர் விளையாட்டுத் துறையில் சி̀றந்து விளங்கினார். ஆக்ஸ்பார்ட் அவரை அதெலெட் க்ளபின் பிரெஸிடெண்ட் என்ற பதவி கொடுத்து மூன்று வருடம் அங்கே இருக்க வைத்தது. அதற்குப் பின் தொண்டு நிறுவனம் ஒன்றில் நிதி திரட்டுபவராக வேலை செய்தார். அரசியல் ஆர்வம் வந்தது. உள்ளூர் கவுன்சிலர் என்று ஆரம்பித்து...

Blog / 12.10.2023

1927 ஆம் ஆண்டு சிகாகோ நகரிலொரு பத்து வயதுச் சிறுவன் தான் எழுதிய கவிதைத் தாளோடு சுற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் முகத்தில் சந்தோஷத்தின் குதூகலம். கவிதைத் தாளிற்குப் பதில் கையில் பத்து டாலர் இருந்தது. அவனுக்குக் கிடைத்த முதல் சம்பளம் அது. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு சம்பாதித்தான். அதிகமாக நாடகக் குழுவில் வாய்ப்புகள் வந்தன. தனது பதினேழாவது வயதில், பெரிய வாய்ப்புகளைத் தேடிச் சென்றவனுக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு. வாரத்திற்கு இருபத்திரண்டு டாலர் சம்பளத்தில் ஸ்க்ரிப்ட் ரீடராக வேலை கிடைத்தது. இரவு நேரங்களில் தன்னுடைய சொந்தத் திரைக் கதையை எழுத ஆரம்பித்தான். அதையும் இருநூற்று ஐம்பது டாலருக்கு விற்றான். வாலிபன் என்றால் இராணுவத்தில் சிறிது காலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. நாடகம் எழுதிக் கொண்டிருந்தவர் இராணுவ பைலட்டாக வேலை செய்தார்....