Home - Naseema Razak
5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-3,page-paged-3,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Blog / 05.10.2023

எல்லாருக்கும் சரியான அம்மா அப்பா கிடைத்துவிடுவதில்லை. அவனுக்கும் அப்படி தான். இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே அப்பா என்ற கதாபாத்திரம் ஓடிப் போனது. ஓடிப்போனவன் தெரிந்தோ தெரியாமலோ உருப்படியான வேலையைச் செய்திருந்தான்.  பெட்டி நிறைய ஃபேண்டஸி ஹாரர் புத்தகங்களை வீட்டில் வைத்துவிட்டுப் போனான். இரண்டு வயதுக் குழந்தைக்கு ஐந்து வயதானது. பொம்மை இல்லாத வீட்டில் அந்தப் பெட்டிதான் எல்லாம். புத்தகங்களோடு விளையாட ஆரம்பித்த குழந்தை நியாயமாகக் கிழித்து இருக்க வேண்டும். ஆனால் வாசித்து முடித்தது. ஏழு வயதில் கதை எழுதத் தயாரானான். பன்னிரண்டு வயதில் பள்ளி மாத இதழ் ஒன்றில் அவன் கதையும் வெளிவந்தது. பேய் படம் பார்ப்பதும்,சைன்ஸ் பிக்சன் படங்கள் பார்க்கும் பழக்கமும் அவனோடு சேர்ந்து வளர்ந்தது.  கல்லூரி படிப்பும் முடிந்தது. ஆங்கிலத்தில் பட்டம். பட்டம் பெற்ற அடுத்த ஆண்டு திருமணம். பள்ளியில் ஆசிரியர் பணி .மூன்று குழந்தைகள் என்று சராசரி வாழ்க்கை. கிடைக்கும் சம்பளத்தில் அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை. எத்தனையோ பகுதி நேர வேலைகள் கைவசம் இருந்தன. ஆனால் எழுதுவதில் மனம் நின்றது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான...

Blog / 04.10.2023

டோக்கியோ நகரிலிருந்த அந்த ஜேஜ் பாரில் பலர் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே ஜேஜ் இசைக்கு ஆடிக் கொண்டும் இருந்தார்கள். மூத்திர வாடையோ வாந்தியோ அங்கு இருக்கவில்லை. கூட்டம் கூடிக் கொண்டிருந்த பாரில் அந்த இளைஞன் பரபரப்பாக இருந்தான். வந்தவர்களுக்கு காக்டெயில் செய்துக் கொண்டும் சைடிஷ்ஷை வைத்துக் கொண்டும் இருந்தான். நடுநடுவே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது அவன் கவனமும் இருந்தது. வாடிக்கையாளர்கள் மட்டையானால் பாதகமில்லை. பணியாட்கள் ஆனால் பேஜாராகிவிடும் என்ற நல்ல நோக்கமே அவன் கவனத்துக்குக் காரணம். வந்தவர்கள் எல்லாம் மகிழ்ந்து உருண்டு செல்ல விடிந்துவிடும். பாரை மூடிவிட்டு நேராக அடுக்களையில் இருக்கும் அடுப்பு மேடையில் காகிதத்தை வைத்து எதையோ கிறுக்க ஆரம்பித்தான். அவன் அப்படி மாறியதற்குக் காரணம் சில நாள்கள் முன் அவன் ரசித்துப் பார்த்த பேஸ் பால் ஆட்டத்திற்குப் பின்பு தான்....

Blog / 24.09.2023

திறமையானவர்கள், வெற்றியாளர்கள் என்று யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அல்லது பிறந்த நொடியில் வெற்றியாளன் என்று கொண்டாடப்படுவதில்லை.  அப்பா மருத்துவர். அம்மா தீவிர மதப்பற்றாளர். அவர்  குழந்தைப் பருவம் அன்றைய மற்ற அமெரிக்கக் குழந்தைகளை விட வசதியாக இருந்தது.  அம்மா கண்டிப்பானவர். மாணவனாக இருந்த போது இரண்டு முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பாவோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டையாடுவதிலும்,மீன்பிடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.  பதினெட்டு வயதாகும் போது வீட்டிலிருந்து தப்பிக்கச் சரியான வழியைக் கண்டுபிடித்தார். அந்தக் காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளோடு போரிடத் தயாராகிக் கொண்டிருந்தது.  தன் நாட்டுக்காகப் போரிட வேண்டும் என்று கிளம்பிச் சென்றவருக்கு ஏமாற்றம். கண் பார்வை சரியில்லை என்று நிராகரித்தார்கள். எப்படியாவது நாட்டுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அடிப்பட்ட போர் வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறினார்.  அப்படியொரு நாள் போர் வீரனை அழைத்துச் செல்லும் போது அவருக்கும் குண்டடிப்பட்டது. அதற்கெல்லாம் அவர்...

Reviews / 22.09.2023

எழுத்தாளர் : கோகிலா பாபு வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும் இவை விளக்கும் வாழ்வியல் உண்மைகள் பெரியது. படிப்பவரின் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற புரிதலை உண்டாக்குவது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையும் அதைத்தான் சொல்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமியின் கதைகளையும், மேலும் சில பழைய கதைகளையும் சேர்த்து தொகுத்துள்ளதாகச் சொல்கிறார் நூலாசிரியர். ஐம்பது கதைகளில் ஐந்தைத் தவிர மற்ற அனைத்தும் எனக்குப் புதியவை. ஒன்றிரண்டு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேவாமிர்தம், வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய் என, எனக்குப் பழகிய வார்த்தைகளும் கதைகளில்...