December 2022 - Naseema Razak
0
archive,date,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Blog / 31.12.2022

நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவையாக இருந்தது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என் நிறுவனமானது நடனம், பாட்டு, இசை, பள்ளிப் பாடங்களுக்கான டியூஷன், அரபி வகுப்பு என்று கிளைகள் விட்டு வளர்ந்து வந்தது. கோவிடில் வந்த ஆன்லைன் வகுப்புகள், சவாலாக இருந்தன. குழந்தைகளை மீண்டும் வகுப்புகளுக்கு அழைத்து வருதல் என்பது எளிதான விஷயமாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் கார் ஓட்டிக் கொண்டு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைத்தான் விரும்பினார்கள். வேலையிலிருந்த ஆசிரியர்களும், கொஞ்சம் கொஞ்சமாக வேறு வழியைப் பார்த்துக் கொண்டார்கள். என்னைச் சுற்றி நடக்கும்...

Reviews / 23.12.2022

சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம். நன்றி Pa Raghavan சார். பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே யாரும் சந்தேகப்படவில்லை. வெளியாகி முடிந்ததும் வாசகர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். (இன்றைய எனது எடையில் சுமார் பத்து கிலோ அப்போது ஏறியதாக இருக்கும்.) அது ஒரு சிறிய சூட்சுமம்தான். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்குக் கதை சொல்லும்போது குழந்தைத்தனமாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுதான் பணி. அதைச் சரியாகச் செய்தால் போதும். வென்றுவிடும். மெல்லினத்துக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் ஒன்றிரண்டு நடந்தன. பெரிய அளவில் எடுபடவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது...

Blog / 15.12.2022

#தளிர் நாவல் முடித்து, மூச்சு விடும் நேரத்தில், இப்படி ஒரு காரியத்தை ஜின் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஒரு நாவலை முழுதாக முடிக்க நான் பட்ட பாடு என் முதுகுக்கும் , மருத்துவருக்கும் தான் வெளிச்சம். அதற்குள் என் கையை இழுத்துக் கொண்டு கணினியோடு கட்டுவது எல்லாம் அராஜகம் . நாவலை முடித்திருந்த ,கொண்டாட்ட மனநிலையை எப்படி மாற்றியது என்று யான் அறியேன். மனம் எதையோ தேட ஆரம்பித்தது .”எதை நீ தேடுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்று உணர்ந்த தருணம் . தேடலில் மூழ்கி மூச்சு முட்டும் போது, கை தானாகக் கணினியைப் பற்றிக் கொண்டது. அப்படி உருவானது தான் “சூஃபி ஆகும் கலை “. நான் மூழ்கி எடுத்தவற்றை உங்களுக்காக எழுத்துக்களால் கோர்த்து உள்ளேன். வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரும் இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் கிடைத்து...

Blog / 14.12.2022

இன்றைய மெட்ராஸ் பேப்பரில் வெளிவந்த என் கட்டுரை. சவூதி அரேபியாவில், ஜோ பிடனுக்கு கிடைக்காத வரவேற்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கிடைத்துள்ளது. இருநூறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. சீன அரேபிய மாநாடு சிற்பாக நடந்து முடிந்தது. அமெரிக்கா நடக்கவே கூடாது என்று நினைத்தது,நடந்து கொண்டிருக்கிறது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை சொடக்கவும். https://www.madraspaper.com/china-arab-summit/ #மெட்ராஸ்_பேப்பர் ...

Reviews / 12.12.2022

    நன்றி Mani Meenakshi Sundaram . நூலின் பெயர் : மராம்பு நூலாசிரியர் : நசீமா ரசாக் முதல் பதிப்பு : ஆகஸ்டு'2022 பக்கங்களின் எண்ணிக்கை : 102 விலை: ரூபாய்.130 வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை - 600042 சங்ககால நூல்களில் பாலை நில மலரெனக் குறிப்பிடப்படும் 'மராம்பு' என்னும் மலரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது இந்நூல். இத்தலைப்பு தமிழகத்தின் பாலை நிலங்களில் காணப்படும் மராம்பு மலரை,தாய்நாட்டை விட்டு வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுடன் ஒப்பீடு செய்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, துபாயில் வசிக்கும் எழுத்தாளர் நசீமா ரசாக் கின் இரண்டாவது குறுநாவல் இந்நூலாகும். இந்நூல் எளிய முறையில் கதை நகர்த்தும் குறுநாவலாக இருந்தாலும், நான்கு பெண்களைச் சுற்றிச் சுழலும் சிறுநூலாக இருந்தாலும் ,தம் குடும்ப வறுமை போக்க அரபு நாடுகளில் கூலி வேலை செய்யும் பெண்களின் துயர வாழ்வை மிகச் சிறப்பாகவே முன்னிறுத்துகிறது. அன்றிலிருந்து இன்றுவரை நாமும் கொஞ்சம் வாழ்ந்துவிட மாட்டோமா,நம்...

Reviews / 12.12.2022

#மணல்_பூத்த_காடு முஹம்மது யூசுப் நண்பர் யூசுப் அவர்களின் எழுத்து எனக்கு புதியது இல்லை என்றாலும் அவர் எழுதிய முதல் நாவல் படிக்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிட்டியது. இது நாவலா? பல கதைகளின் தொடரா? பயண நூலா? வரலாற்றுப் புத்தகமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் "ஆம்" என்ற பதிலை வாசகன் தர எழுத்தாளர் எடுத்த புதிய வடிவமைப்பு இந்த நாவல். ஒருவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள அவனுடன் பயணம் செய்தால் போதும் என்ற நபிகள் நாயகத்தின் மொழியை முன்னுரையில் வைத்து நாவல் தொடர்கிறது. வேர் பதியாத சொந்த மண்ணிலிருந்து உருவி வளைகுடா சென்று வேர் பிடித்தும் பிடிக்காமல் வாழும் பலரோடு பிரதிபலிப்பாக "அனீஸ்" என்ற கதாபாத்திரம் மூலம் நாவல் நகர்கின்றது. நாவல் முழுக்க ரியாத்தில் இருந்து பல மைல்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வது சுவாரசியத்திற்குச் சிறிது தடையாக இருந்தாலும் அதனூடே கிடைக்கும் அனுபவங்கள்...

Blog / 08.12.2022

என் மாணவர்களோடு நிறையப் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த படம் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த குட்டி வாண்டு பெயர் “காவரில்” என் சென்டரின் கடைக்குட்டி . ஒரு நாள் நான் கதை சொல்லும் போது தானும் சொல்ல வேண்டும், என்று என் அருகில் வந்தான். நான் கதை முடித்த பிறகு, நீ கதை சொல் என்றேன்.என் அருகிலே நின்று கொண்டு இருந்தான், அதுவும் சும்மா இல்லை என் சுண்டி விரலைச் சுரண்டிக் கொண்டே . நான் முடித்த பிறகு கதை சொல்லத் தொடங்கினான்.என்னை அங்கே இருந்து நகர விடாமல் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கதைத்தான். அவன் கதைப்பது முடியும் வரை, அந்த பிஞ்சு விரல்களும் அந்த அன்பைச் சொல்லிக் கொண்டு இருந்தது....

Reviews / 08.12.2022

#நடைவண்டியில் ஏறி கவிதை படிக்க ஆர்வமாய் பயணித்தேன். அழகான கவிதைகள் ஆழமான சிந்தனைகள் என்ற பக்குவமான எழுத்துக்கள். 25 வருடத்திற்கு முன் எழுதிய அந்த இளைஞனை யோசித்து வியந்தேன். " சுதந்திரம் " மூலம் தந்த தாகம், " சதுரங்கம் " ஆட்டத்தை நடத்தி இறுதியாக எதிரியுடன் கை குலுக்குவதே சுதந்திரம் என்று முடிக்கும் மனம், கடிகார முட்கள் சொல்லும் கம்பீரம், வீரம், ஒரே பாதையில் பயணித்தும் ஒன்றை ஒன்று தடுத்துக் கொள்ளாத நாகரீகம், "நவீன நாடுகடத்தல்", தீ என்று பெண் உணர்வுகளையும் சேர்த்து சமூக சிந்தனைகளை எழுத்துக்களால் செதுக்கி இருக்கின்றார்.இந்த நூலை Brindha Sarathy #பிருந்தா சாரதி அவர்களிடம் இருந்து பரிசாக பெற்றது கூடுதல் சிறப்பு....

Reviews / 08.12.2022

#திருக்கார்த்தியல் நாம் அன்றாடம் வாழ்க்கையில் எங்கோ ஒரு பஸ் ஸ்டாப்பில் சேலை விலகிய அலங்கோலமான பெண்ணை கடந்து இருப்போம் , கிராமங்களில் இருக்கும் மாணவ விடுதிகளைக் கடந்து இருப்போம் , பம்ப் செட்டின் சின்ன அறையை வீடாக கொண்ட குடுபங்களைக் கடந்து இருப்போம் . இப்படி இயல்பாகத் தோன்றும் இந்த மக்களின் வலிகளை ஒவ்வொரு கதைகளில் வரும் கதாபாத்திரம் மூலம் , வாசகர்கள் கடந்து செல்ல முடியாமல் ,அந்த மக்களை கவனத்திற்குக் கொண்டுவந்து இருக்கிறார் ராம். பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை தெரு முழுக்க சமைக்க , மாணவ விடுதியில் தங்கி படிக்கும் செந்தமிழுக்கு, வெறும் வாசனையை மட்டும் தந்த வீதி மக்களின் மீது வந்த கோபம் . காய்ந்துபோன, கெட்டுப்போன அல்வாவை சுவைத்த அவன் நாக்கு, இயலாமையை , ஏமாற்றத்தை அறைந்து சொல்லுகின்றது . அம்மாவும், அப்பாவும்...

Reviews / 08.12.2022

"ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் கவிதாவிடம் ஒரு கேள்வி " அடுத்த புத்தகம் எப்ப வரும்?...