September 2023 - Naseema Razak
0
archive,date,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Blog / 24.09.2023

திறமையானவர்கள், வெற்றியாளர்கள் என்று யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அல்லது பிறந்த நொடியில் வெற்றியாளன் என்று கொண்டாடப்படுவதில்லை.  அப்பா மருத்துவர். அம்மா தீவிர மதப்பற்றாளர். அவர்  குழந்தைப் பருவம் அன்றைய மற்ற அமெரிக்கக் குழந்தைகளை விட வசதியாக இருந்தது.  அம்மா கண்டிப்பானவர். மாணவனாக இருந்த போது இரண்டு முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பாவோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டையாடுவதிலும்,மீன்பிடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.  பதினெட்டு வயதாகும் போது வீட்டிலிருந்து தப்பிக்கச் சரியான வழியைக் கண்டுபிடித்தார். அந்தக் காலகட்டத்தில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளோடு போரிடத் தயாராகிக் கொண்டிருந்தது.  தன் நாட்டுக்காகப் போரிட வேண்டும் என்று கிளம்பிச் சென்றவருக்கு ஏமாற்றம். கண் பார்வை சரியில்லை என்று நிராகரித்தார்கள். எப்படியாவது நாட்டுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அடிப்பட்ட போர் வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறினார்.  அப்படியொரு நாள் போர் வீரனை அழைத்துச் செல்லும் போது அவருக்கும் குண்டடிப்பட்டது. அதற்கெல்லாம் அவர்...

Reviews / 22.09.2023

எழுத்தாளர் : கோகிலா பாபு வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும் இவை விளக்கும் வாழ்வியல் உண்மைகள் பெரியது. படிப்பவரின் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற புரிதலை உண்டாக்குவது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையும் அதைத்தான் சொல்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமியின் கதைகளையும், மேலும் சில பழைய கதைகளையும் சேர்த்து தொகுத்துள்ளதாகச் சொல்கிறார் நூலாசிரியர். ஐம்பது கதைகளில் ஐந்தைத் தவிர மற்ற அனைத்தும் எனக்குப் புதியவை. ஒன்றிரண்டு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேவாமிர்தம், வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய் என, எனக்குப் பழகிய வார்த்தைகளும் கதைகளில்...

Madras Paper / 21.09.2023

பாகிஸ்தான் சரித்திரத்தில் இதற்குமுன் நடந்திராத ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. என்னை ஐ.எஸ்.ஐயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் அரசு அதிகாரியிடம் தஞ்சம் கேட்டிருக்கிறார். இதனாலெல்லாம் உலகம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. நம்ப முடியாத அவ்வுண்மைச் சம்பவத்தைப் படிக்க லிங்க் கீழே. https://www.madraspaper.com/hizbulla-mujahidin-isi-warning/ ...

Madras Paper / 06.09.2023

2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும்.  இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.   https://www.madraspaper.com/syria-isis-refugees-camp/  ...