பா. ராகவன் Archives - Naseema Razak
186
archive,tag,tag-186,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு, புக்பெட் வகுப்பு ஓர் திறவுகோல். எழுத எத்தனையோ இருக்கிறது; ஆனால் உட்கார்ந்தால் ஏதோ இடிக்கிறது; சரியாக வருவதில்லை என்று குறைப்படுவோருக்கு. ஆரம்பித்துவிட்டு முடிக்க முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கு. எழுத வருகிறது; ஆனால் பிறர் பாராட்டும் அளவுக்குச் செய்ய முடிவதில்லை என்போருக்கு. பளிச்சென்று ஊரே திரும்பிப் பார்க்கும்படியாக எழுதிவிட வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் கொண்டோருக்கு. அனைத்துக்கும் மேலாக, எழுத்து ஒரு கலை மட்டுமல்ல. பெரும் நுட்பங்களும் அடங்கிய செயல்பாடு; அதைக் கற்றுத் தேர்ந்தால்தான் முன்னணிக்கு வர முடியும் என்ற தெளிவு உள்ளவர்களுக்கு. நான் எழுத ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பின்தான் இந்த வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்புக்குப் போனோம், கற்றுக் கொண்டு வந்தோம் என்று முடிந்திடவில்லை. வகுப்பு முடிந்த பின்னும் ,தொடர்ந்து பல விதமான கற்றல் நடந்து கொண்டிருந்தது. வகுப்பிற்கு...

மெட்ராஸ் பேப்பர் ஆரம்பம் முதல் பா. ராகவன் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனது புக்பெட் வகுப்புக்கு வந்த சிறந்த  மாணவர்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து  அடுத்த கட்ட பயிற்சிக்குத் தயார் செய்தார். மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுத வைத்தார். வகுப்புக்கு வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லாமல், வகுப்புக்கு வந்தார்கள் வென்றார்கள் என்ற இடத்திற்குத் தனது மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றினார். இது எல்லாம் ஒரே நாளில் நடந்து முடியவில்லை. இதற்குப் பின் அவரது உழைப்புக்கு ஈடு கொடுக்க மாணவர்களும் தயாரானார்கள். [caption id="attachment_15741" align="alignleft" width="300"] பா. ராகவன்[/caption] வாழ்க்கையில் முதல் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் 13 புத்தகங்களை ,ஜீரோ டிகிரி பதிப்பு மூலம் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவுள்ளன. ஓரிருவர் தவிர மற்ற 11 பேரும் முதல் முறை எழுத்தாளர்கள். ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று...

சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம். நன்றி Pa Raghavan சார். பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே யாரும் சந்தேகப்படவில்லை. வெளியாகி முடிந்ததும் வாசகர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். (இன்றைய எனது எடையில் சுமார் பத்து கிலோ அப்போது ஏறியதாக இருக்கும்.) அது ஒரு சிறிய சூட்சுமம்தான். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்குக் கதை சொல்லும்போது குழந்தைத்தனமாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுதான் பணி. அதைச் சரியாகச் செய்தால் போதும். வென்றுவிடும். மெல்லினத்துக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் ஒன்றிரண்டு நடந்தன. பெரிய அளவில் எடுபடவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது...