blog Archives - Naseema Razak
229
archive,tag,tag-blog,tag-229,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

நாம் வாழும் இந்த டிஜிட்டல் யுகத்தில், தகவல் பகிர்வு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அனைத்தையும் பகிர்வது அவசியமா என்று நாம் யோசிப்பதில்லை. ஒரு வேலையைச் செய்ய ஆரம்பிக்கும் போதே அதைப் பெரிதாகப் பேசிவிடுகிறோம். உளவியல் ரீதியாக இலக்குகளை, கனவுகளை நாம் பகிரும்போது, நமது மூளை அதை ஓரளவு சாதித்ததாக எடுத்துக் கொள்கிறது. இது நம் உந்துதலைக் குறைக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 2009இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்கள் இலக்குகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், அதை அடைவதற்கான முயற்சியில் ஆர்வம் செலுத்தவில்லை என்று கண்டறியப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். திருவள்ளுவர்கூட இதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு நடந்தாலே பாதிக் கிணற்றைத் தாண்டி விடலாம். கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். அதாவது, ஒரு செயலைச் செய்து...

  எண்பத்தி மூன்று வயதாகும் அந்த முதியவருக்காக இன்றும் வாசகன் காத்துக் கொண்டிருக்கிறான். அவர் பிறக்கும் போது தந்தை இழப்பு. தாய் லண்டனில் இருக்கும் வெஸ்டன் நகரின் லோக்கல் செய்தித்தாளில் வாராந்திர பத்தி எழுத்தாளர். இலக்கியம், வரலாறு பாடங்களில் சிறந்து விளங்கிய அந்த இளைஞன் இராணுவம், காவல்துறை, ஆசிரியர் என்று கிடைத்த வேலை எதையும் விடவில்லை. 1963-ஆம் ஆண்டு ஆக்ஸ்பார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் டிப்ளமோ படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார் என்று பலர் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர் விளையாட்டுத் துறையில் சி̀றந்து விளங்கினார். ஆக்ஸ்பார்ட் அவரை அதெலெட் க்ளபின் பிரெஸிடெண்ட் என்ற பதவி கொடுத்து மூன்று வருடம் அங்கே இருக்க வைத்தது. அதற்குப் பின் தொண்டு நிறுவனம் ஒன்றில் நிதி திரட்டுபவராக வேலை செய்தார். அரசியல் ஆர்வம் வந்தது. உள்ளூர் கவுன்சிலர் என்று ஆரம்பித்து...