ஜீரோ டிகிரி Archives - Naseema Razak
185
archive,tag,tag-185,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive
Reviews / 17.01.2024

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல். இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார். 1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன்...

Reviews / 22.09.2023

எழுத்தாளர் : கோகிலா பாபு வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும் இவை விளக்கும் வாழ்வியல் உண்மைகள் பெரியது. படிப்பவரின் வயதுக்கும் மனதுக்கும் ஏற்ற புரிதலை உண்டாக்குவது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையும் அதைத்தான் சொல்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமியின் கதைகளையும், மேலும் சில பழைய கதைகளையும் சேர்த்து தொகுத்துள்ளதாகச் சொல்கிறார் நூலாசிரியர். ஐம்பது கதைகளில் ஐந்தைத் தவிர மற்ற அனைத்தும் எனக்குப் புதியவை. ஒன்றிரண்டு பக்கங்களில் தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றன. தேவாமிர்தம், வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தேங்காய் என, எனக்குப் பழகிய வார்த்தைகளும் கதைகளில்...

Programs / 04.01.2023

மெட்ராஸ் பேப்பர் ஆரம்பம் முதல் பா. ராகவன் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனது புக்பெட் வகுப்புக்கு வந்த சிறந்த  மாணவர்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து  அடுத்த கட்ட பயிற்சிக்குத் தயார் செய்தார். மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுத வைத்தார். வகுப்புக்கு வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லாமல், வகுப்புக்கு வந்தார்கள் வென்றார்கள் என்ற இடத்திற்குத் தனது மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றினார். இது எல்லாம் ஒரே நாளில் நடந்து முடியவில்லை. இதற்குப் பின் அவரது உழைப்புக்கு ஈடு கொடுக்க மாணவர்களும் தயாரானார்கள். [caption id="attachment_15741" align="alignleft" width="300"] பா. ராகவன்[/caption] வாழ்க்கையில் முதல் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் 13 புத்தகங்களை ,ஜீரோ டிகிரி பதிப்பு மூலம் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவுள்ளன. ஓரிருவர் தவிர மற்ற 11 பேரும் முதல் முறை எழுத்தாளர்கள். ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று...

Reviews / 23.12.2022

சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம். நன்றி Pa Raghavan சார். பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே யாரும் சந்தேகப்படவில்லை. வெளியாகி முடிந்ததும் வாசகர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். (இன்றைய எனது எடையில் சுமார் பத்து கிலோ அப்போது ஏறியதாக இருக்கும்.) அது ஒரு சிறிய சூட்சுமம்தான். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்குக் கதை சொல்லும்போது குழந்தைத்தனமாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுதான் பணி. அதைச் சரியாகச் செய்தால் போதும். வென்றுவிடும். மெல்லினத்துக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் ஒன்றிரண்டு நடந்தன. பெரிய அளவில் எடுபடவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது...

Blog / 15.12.2022

#தளிர் நாவல் முடித்து, மூச்சு விடும் நேரத்தில், இப்படி ஒரு காரியத்தை ஜின் செய்யாமல் இருந்திருக்கலாம் . ஒரு நாவலை முழுதாக முடிக்க நான் பட்ட பாடு என் முதுகுக்கும் , மருத்துவருக்கும் தான் வெளிச்சம். அதற்குள் என் கையை இழுத்துக் கொண்டு கணினியோடு கட்டுவது எல்லாம் அராஜகம் . நாவலை முடித்திருந்த ,கொண்டாட்ட மனநிலையை எப்படி மாற்றியது என்று யான் அறியேன். மனம் எதையோ தேட ஆரம்பித்தது .”எதை நீ தேடுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்று உணர்ந்த தருணம் . தேடலில் மூழ்கி மூச்சு முட்டும் போது, கை தானாகக் கணினியைப் பற்றிக் கொண்டது. அப்படி உருவானது தான் “சூஃபி ஆகும் கலை “. நான் மூழ்கி எடுத்தவற்றை உங்களுக்காக எழுத்துக்களால் கோர்த்து உள்ளேன். வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரும் இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்கள் கிடைத்து...