madras paper Archives - Naseema Razak
188
archive,tag,tag-madras-paper,tag-188,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

பாகிஸ்தான் சரித்திரத்தில் இதற்குமுன் நடந்திராத ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. என்னை ஐ.எஸ்.ஐயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் அரசு அதிகாரியிடம் தஞ்சம் கேட்டிருக்கிறார். இதனாலெல்லாம் உலகம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. நம்ப முடியாத அவ்வுண்மைச் சம்பவத்தைப் படிக்க லிங்க் கீழே. https://www.madraspaper.com/hizbulla-mujahidin-isi-warning/ ...

2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும்.  இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.   https://www.madraspaper.com/syria-isis-refugees-camp/  ...

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ் ட்விட்டர்வாசிகள் எல்லோருக்கும் தெரியும். சிற்றிதழ்களாலும் பேரிதழ்களாலும் கைவிடப்பட்ட ஓர் இலக்கிய நிராயுதபாணி என்று நண்பரொருவர் சொன்னார். எத்தனை அபத்தம் இது. பேயோனின் எழுத்தை வாசிக்க நேரும் எந்த ஓர் எடிட்டரும் துள்ளிக் குதித்து அள்ளிக்கொள்ளாதிருக்க வாய்ப்பே இல்லை. சுய எள்ளல் போர்வையில் அவரே சொல்லிக்கொண்டாலும் சந்தேகமின்றி,  சமகால, தனித்துவ எழுத்துதான் அவருடையது. சந்தேகமில்லை. பேயோனின் பலம் அவரது அபாரமான நகைச்சுவை உணர்வில் உள்ளது. பலநாள் அலுவலகத்தில் வேலைக்கிடையே அவரது...

நம் அனைவருக்கும் அரபிப் பெண்களைப் பற்றி பல அபிப்ராயங்கள் உண்டு. கல்வி இல்லாதவர்கள். விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அல்லல் படுகிறவர்கள். இவை அனைத்தும் உண்மைதானா? சவூதி அரேபியப் பெண்கள் மட்டும் அரேபியர்களா?வேறு அரபிப் பெண்கள் இருக்கிறார்களா?இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் இன்று வளிவந்த மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் இருக்கின்றது. கீழே உள்ள சுட்டியைச் சொடக்கவும்.   https://www.madraspaper.com/arab-women-today/ ...

எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு, புக்பெட் வகுப்பு ஓர் திறவுகோல். எழுத எத்தனையோ இருக்கிறது; ஆனால் உட்கார்ந்தால் ஏதோ இடிக்கிறது; சரியாக வருவதில்லை என்று குறைப்படுவோருக்கு. ஆரம்பித்துவிட்டு முடிக்க முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கு. எழுத வருகிறது; ஆனால் பிறர் பாராட்டும் அளவுக்குச் செய்ய முடிவதில்லை என்போருக்கு. பளிச்சென்று ஊரே திரும்பிப் பார்க்கும்படியாக எழுதிவிட வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் கொண்டோருக்கு. அனைத்துக்கும் மேலாக, எழுத்து ஒரு கலை மட்டுமல்ல. பெரும் நுட்பங்களும் அடங்கிய செயல்பாடு; அதைக் கற்றுத் தேர்ந்தால்தான் முன்னணிக்கு வர முடியும் என்ற தெளிவு உள்ளவர்களுக்கு. நான் எழுத ஆரம்பித்து சில வருடங்களுக்குப் பின்தான் இந்த வகுப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்புக்குப் போனோம், கற்றுக் கொண்டு வந்தோம் என்று முடிந்திடவில்லை. வகுப்பு முடிந்த பின்னும் ,தொடர்ந்து பல விதமான கற்றல் நடந்து கொண்டிருந்தது. வகுப்பிற்கு...

மெட்ராஸ் பேப்பர் ஆரம்பம் முதல் பா. ராகவன் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தனது புக்பெட் வகுப்புக்கு வந்த சிறந்த  மாணவர்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து  அடுத்த கட்ட பயிற்சிக்குத் தயார் செய்தார். மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுத வைத்தார். வகுப்புக்கு வந்தார்கள் சென்றார்கள் என்று இல்லாமல், வகுப்புக்கு வந்தார்கள் வென்றார்கள் என்ற இடத்திற்குத் தனது மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றினார். இது எல்லாம் ஒரே நாளில் நடந்து முடியவில்லை. இதற்குப் பின் அவரது உழைப்புக்கு ஈடு கொடுக்க மாணவர்களும் தயாரானார்கள். [caption id="attachment_15741" align="alignleft" width="300"] பா. ராகவன்[/caption] வாழ்க்கையில் முதல் கொடுக்கும் அனுபவம் அலாதியானது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் 13 புத்தகங்களை ,ஜீரோ டிகிரி பதிப்பு மூலம் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவுள்ளன. ஓரிருவர் தவிர மற்ற 11 பேரும் முதல் முறை எழுத்தாளர்கள். ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று...

நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவையாக இருந்தது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என் நிறுவனமானது நடனம், பாட்டு, இசை, பள்ளிப் பாடங்களுக்கான டியூஷன், அரபி வகுப்பு என்று கிளைகள் விட்டு வளர்ந்து வந்தது. கோவிடில் வந்த ஆன்லைன் வகுப்புகள், சவாலாக இருந்தன. குழந்தைகளை மீண்டும் வகுப்புகளுக்கு அழைத்து வருதல் என்பது எளிதான விஷயமாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் கார் ஓட்டிக் கொண்டு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைத்தான் விரும்பினார்கள். வேலையிலிருந்த ஆசிரியர்களும், கொஞ்சம் கொஞ்சமாக வேறு வழியைப் பார்த்துக் கொண்டார்கள். என்னைச் சுற்றி நடக்கும்...